ப்ராஜெக்ட் முடிக்க
ஓவர் டைமில் வேலைசெய்து திரும்பும் அவள்
பேச்சுத்துணைக்கு போன் செய்திருந்தாள்.
வழிதோறும் நடந்தவைகளை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கையில்
எதிர்ப்பட்ட
நொண்டி பிச்சைக்காரன்,
பீடி பிடிக்கும் ஆட்டோக்காரன்,
மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்
மேல் பட்டன் போடாத எவனோஒருவனென
எவருமே
நல்லவராய் தெரியவில்லையெனக்கு
அவள் வீடு சேரும்வரை.
அன்றொருநாள்
இரவு பதினொரு மணிவாக்கில்
இளஆரஞ்சு நிற சுடிதாரணிந்து
மாநிறமாய்
நீள்வட்ட முகத்தில்
அழகிய உதட்டுடன்
எனைப்பார்த்ததும்
மிரண்டு வேகமாய் நகர்ந்த எவளயோ
எதேச்சையாய் நினைவுக்கு வந்தது.
சட்டென்று
இந்த இரு சம்பவத்துக்கும்
சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டது
உள்ளிருந்து ஏதோ
- உயிரோசையில் பிரசுரமான கவிதை
11 comments
Comments feed for this article
December 2, 2008 at 6:33 am
அனுஜன்யா
காந்தி,
உயிர்மையில் இப்போதுதான் பார்த்தேன். நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
December 2, 2008 at 10:54 am
TKB Gandhi
நன்றி அனுஜன்யா.
உங்களோட கவிதை “பிசுபிசுப்பு” உயிரோசையில் பார்த்தேன், ரொம்ப நல்லா இருந்தது.
December 2, 2008 at 4:19 pm
K.Ravishankar
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
December 2, 2008 at 6:37 pm
TKB Gandhi
நன்றி ரவி 🙂
December 3, 2008 at 2:56 am
Saravana Kumar MSK
வாழ்த்துக்கள் 🙂
December 3, 2008 at 2:57 am
Saravana Kumar MSK
கவிதை அழகு 🙂
December 3, 2008 at 7:19 am
Minnal
வாழ்த்துகள்
December 3, 2008 at 8:01 am
அனுஜன்யா
அப்படி சொன்னால் போதாது காந்தி. பதிவில் போடும்போது ‘பிரமாதம்’ னு பின்னூட்டம் போடணும். ஓகே?
அனுஜன்யா
December 3, 2008 at 2:00 pm
TKB Gandhi
@சரவணன்:
வாழ்த்திற்கும் அழகிற்கும் நன்றி சரவணன் 🙂 நீங்க கவிதை எழுதி ரொம்ப நாளாகுது எங்களுக்காக ஒன்னு எழுதுங்களேன்.
@மின்னல்:
வாழ்த்திற்கு நன்றி லாவண்யா. உங்கள் முதல் கமெண்ட் 🙂
@அனுஜன்யா:
நான் நேத்துலருந்து பாக்குறேன் நீங்க இன்னும் அந்த கவிதைய போஸ்ட்டா போடவேயில்ல! சீக்கரம் போடுங்க “மீ த _ _” “பிரமாதம்,” “அட்டகாசம்”னெல்லாம் கமெண்ட் போடறேன் 🙂
December 9, 2008 at 7:19 am
Pradeep
Epdi da idhu!!!
May 19, 2009 at 3:12 am
cheena (சீனா)
அன்பின் காந்தி
அருமையான கவிதை.
தோழி இரவினில் தெருவினில் வரும்போது – அனைத்து ஆண்களுமே கெட்டவர்களாகத் தெரிகிறார்கள். பீடி பிடிப்பவன், நொண்டி, மேல் பட்டான் போடாத ரவுடி இப்படி. ஆனால் நாம் நடந்து வரும் போது மட்டும் – இளஆரஞ்சு நிற சுடிதாரணிந்து, மாநிறமாய், நீள்வட்ட முகத்தில், அழகிய உதட்டுடன் இளம் பெண் நடந்து வரவேண்டும். அவளுக்கு நாம் நல்லவர்களாகத் தெரிய வேண்டும். என்ன சிந்தனை இது ?
இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை.
கவிதை அருமை – வர்ணனை அருமை – இளமைச் சிந்தனை அருமை
நல்வாழ்த்துகள்