மதம், இனம், மொழி பார்த்து
நிச்சயித்து
அம்மி மிதித்து, அருந்ததியும் பார்த்து
முடிந்துவிட்ட நம் திருமணத்தின்
களவி மயக்கத்தை கடந்துவிட்ட பின்
அன்றோருநாளின் நம் உக்கிர சண்டையில்
தூங்காமல் விழித்திருந்த நடுஇரவில்
டிவியில் ஒளிபரப்பானது
கல்லூரியில் எனை யாசித்தவளுக்கு
பிடித்தபாடல்கள்…
நேயர்விருப்பமாய்!